×

பாலியல் வன்கொடுமை வழக்கில் ரேவண்ணா கைது

பெங்களுரு: பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக உள்ள பிரஜ்வலின் தந்தையும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனுமான ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார். ரேவண்ணாவின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கர்நாடக சிறப்பு புலனாய்வு குழு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பாலியல் வன்கொடுமை, பெண்ணை கடத்திய வழக்கில் பிரஜ்வல், தந்தை ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது. பெங்களூரு பத்மநாப நகரில் உள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடா வீட்டில் வைத்து ரேவண்ணாவை போலீஸ் கைது செய்தது. ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் 300-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. பிரஜ்வல் தொடர்பான 3000 ஆபாச வீடியோக்கள் வெளியானதை அடுத்து சிறப்பு புலனாய்வு அமைத்து கர்நாடக போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

 

The post பாலியல் வன்கொடுமை வழக்கில் ரேவண்ணா கைது appeared first on Dinakaran.

Tags : Revanna ,Bengaluru ,Prajwal ,Devagawuda ,Karnataka Special Investigation Team ,Revna ,Munjam ,
× RELATED பாலியல் வழக்கில் சிக்கியதால்...